Published : 15 May 2021 03:13 AM
Last Updated : 15 May 2021 03:13 AM
கும்மிடிப்பூண்டி அருகே உள்ள சோழியம்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் முத்து(38). இவர் கடந்த 11-ம் தேதி பயிர்களுக்கு தண்ணீர் பாய்ச்சிக்கொண்டிருந்தார்.
அப்போது, விஷப் பாம்பு கடித்ததால் ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்றுமுன்தினம் முத்து உயிரிழந்தார்.
இதேபோல, மீஞ்சூர் அருகேஉள்ள அனுப்பம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த ஜெயந்தியை(35) நேற்று முன்தினம் இரவு விஷப் பாம்பு கடித்தது. அவர் ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டபோது, வழியிலேயே உயிரிழந்தார்.
இது தொடர்பாக கும்மிடிப்பூண்டி, மீஞ்சூர் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT