Published : 15 May 2021 03:13 AM
Last Updated : 15 May 2021 03:13 AM
திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் அருகேயுள்ள அத்திப்பட்டு புதுநகரில் வடசென்னை அனல் மின் நிலையம் செயல்பட்டு வருகிறது. இங்கு முதல் நிலையின் 3 அலகுகளில் தலா 210 மெகாவாட், 2-வது நிலையின் இரு அலகுகளில் தலா 600 மெகாவாட் என மொத்தம் 1,830 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.
இந்நிலையில், முதல் நிலையின் 3-வது அலகில் நேற்றுமுன் தினம் இரவு கொதிகலனில் கசிவு ஏற்பட்டது. இதனால், அந்த அலகில் 210 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. கசிவை சரிசெய்யும் பணியில் மின்ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். அப்பணி விரைவில் முடிவுக்கு வந்துவிடும். பிறகு210 மெகாவாட் மின் உற்பத்தி தொடங்கப்படும் என்று அனல் மின் நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT