Published : 15 May 2021 03:13 AM
Last Updated : 15 May 2021 03:13 AM

புதுச்சேரியில் தொடர்ந்து அதிகரிக்கும் கரோனா ஒரே மாதத்தில் 401 பேர் உயிரிழப்பு :

புதுச்சேரி

புதுச்சேரியில் கரோனா தொற்று பாதிப்பு கடந்த ஒரு மாதத்தில் முன் எப்போதும் இல்லாத அளவுக்கு அதிகரித்துள்ளது. கடந்த ஏப்ரல் 14-ம் தேதி 3,032 ஆக இருந்த கரோனா பாதிப்பு, மே 14-ம் தேதியன்று 17,424 ஆக உயர்ந்துள்ளது. குறிப்பாக கடந்த ஒரு மாதத்தில் 401 பேர் உயிரிழந்து உள்ளனர்.

புதுச்சேரி மாநிலத்தில் நேற்று புதிதாக 9,148 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டது. இதில் புதுச்சேரி – 1,580, காரைக்கால் - 224, ஏனாம் – 152, மாகே - 18 பேர் என மொத்தம் 1,974 பேருக்கு புதிதாக கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. அத்துடன், புதுவையில் 24 பேர், காரைக்காலில் 4 பேர், ஏனாமில் 2 பேர் என 30 பேர் உயிரிழந்துள்ளனர். இவர்களில் 16 பேர் ஆண்கள், 14 பேர் பெண்கள் ஆவர். இதில் 15 பேர் 60 வயதுக்கு குறைவானவர்கள். உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,099 ஆக அதிகரித்துள்ளது.

இதுவரை 80,947 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x