Published : 15 May 2021 03:13 AM
Last Updated : 15 May 2021 03:13 AM

புதுவை மருத்துவ மனைகளில் 3 ஆயிரம் படுக்கைகள் :

புதுச்சேரி

கரோனா தாக்கத்தை கருத்தில் கொண்டு, சுகாதாரத்துறை அளித்த பரிந்துரையின் பேரில் புதுச்சேரியில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளான லட்சுமி நாராயணா, வெங்கடேஸ்வரா, அறுபடை, பி்ம்ஸ், காரைக்கால் விநாயகா மருத்துவ மிஷன் கல்லூரி மருத்துவமனைகளில் உள்ள படுக்கைகளை 100 சதவீதம் கரோனாவால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க படுக்கைகள் ஒதுக்க துணைநிலை ஆளுநர் தமிழிசை ஆணை பிறப்பித்து, ஒப்புதல் அளித்துள்ளார். இதில் சுமார் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட படுக்கைகள் ஒதுக்கப்பட உள்ளது. கரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க இந்திராகாந்தி அரசு மருத்துவமனைக்கு ரூ. 7.37 கோடி சுவாச கருவிகள் வாங்கவும், மருத்துவ பணியாளர்களை வேலைக்கு அமர்த்தவும் ஒப்புதல் அளித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x