Published : 15 May 2021 03:13 AM
Last Updated : 15 May 2021 03:13 AM

தடுப்பூசியால் உயிரிழப்பு தடுக்கப்படுகிறது : அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் உறுதி

தடுப்பூசி போட்டு, கொரானா பாதிப்பு வந்தால் உயிரிழப்பு தடுக்கப்படுகிறது என்று வருவாய்த் துறை அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் கூறினார்.

அருப்புக்கோட்டை வட்டாட்சியர் அலுவலகத்தில் கரோனா பரவல் தடுப்புப் பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் நேற்று மாலை நடைபெற்றது. ஆட்சியர் இரா.கண்ணன் தலைமை வகித்தார். இதில் வருவாய்த் துறை அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் பங்கேற்று அதிகாரிகளுக்கு பல்வேறு அறிவுரைகளை வழங்கினார்.

பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

அருப்புக்கோட்டை ஊராட்சி ஒன்றியப் பகுதிகளில் கரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து நானும், மாவட்ட ஆட்சியரும் அரசு அலுவலர்களுடன் ஆய்வு செய்தோம். கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் வீடுகளை அடையாளப்படுத்தும் விதமாக வில்லைகள் ஒட்ட அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அருப்புக்கோட்டை வட்டாரத்தில் ஊரகப் பகுதிகளில் 14,000 பேருக்கு தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன. ஆனால், நகர்ப்புறங்களில் 3,400 பேருக்கும், நகர அரசு மருத்துவமனையில் 3,464பேருக்கும் என சுமார் 21,000 பேருக்குதடுப்பூசி போடப்பட்டுள்ளது. இதை அதிகப்படுத்த நகராட்சி அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. தடுப்பூசி போட்டு கரோனா வந்தாலும் உயிரிழப்பு தடுக்கப்படுகிறது. இதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x