Published : 13 May 2021 03:12 AM
Last Updated : 13 May 2021 03:12 AM

கரோனா தடுப்புப் பணி நீலகிரி ஆட்சியர் ஆய்வு :

நீலகிரி மாவட்டம் கூடலூர்நகராட்சியிலுள்ள தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளை ஆய்வு செய்த ஆட்சியர் ஜெ.இன்னசென்ட் திவ்யா, அப்பகுதிகளில் எடுக்கப்பட்டுள்ள பாதுகாப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து கேட்டறிந்தார்.

அதன்பின்பு செய்தியாளர் களிடம் ஆட்சியர் கூறும்போது‘‘கோழிப்பாலத்தில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, தொரப்பள்ளியிலுள்ள அரசுப் பழங்குடியினர் பள்ளி, ஹெல்த்கேம்ப் பகுதிகளிலுள்ள அரசுப் பள்ளி ஆகியவற்றை கரோனா சிகிச்சை மையங்களாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது’’ என்றார். இந்த ஆய்வின்போது கோட்டாட்சியர் ராஜ்குமார்,நகராட்சி ஆணையர் பாஸ்கர்,உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x