Published : 13 May 2021 03:12 AM
Last Updated : 13 May 2021 03:12 AM
உடுமலை உழவர் சந்தை அருகேயுள்ள கிளை நூலகம் எண் 2-ன் சார்பில், வட்டாட்சியர் அலுவலகம், காவல் நிலையம், கிளை சிறைச்சாலை, தபால் நிலையம் உள்ளிட்ட இடங்களில் அரசு அலுவலர்களுக்கும், பொதுமக்களுக்கும் கபசுர குடிநீர் நேற்று விநியோகிக்கப்பட்டது.
இதுகுறித்து நூலகர் வீ.கணேசன் கூறும்போது, “எங்கள் கிளை நூலகம் சார்பில் வாசிப்பு மட்டுமின்றி பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கான பல்வேறு விழிப்பு ணர்வுப் போட்டிகளும் நடத்தப்படுகின்றன. கடந்த சில மாதங்களாகவே நிலவேம்பு, மூலிகை தேநீர், கபசுரக் குடிநீர் என தொடர்ந்து முன் களப்பணியாளர்களின் பாதுகாப்புக்காக இலவசமாக விநியோகம் செய்து வருகிறோம்” என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT