Published : 10 May 2021 06:24 AM
Last Updated : 10 May 2021 06:24 AM

எதிர்க்கட்சித் தலைவரை தேர்ந்தெடுக்க - அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டத்துக்கு போலீஸார் அனுமதி :

தமிழகத்தில் இன்றுமுதல் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில் அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் நடத்த போலீஸார் அனுமதி வழங்கியுள்ளனர்.

நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தலில் திமுக பெரும்பான்மையை பெற்று ஆட்சி அமைத்தது. அதிமுக 65 இடங்களில் வெற்றி பெற்று எதிர்க்கட்சி அந்தஸ்து பெற்றுள்ளது.

இந்நிலையில் எதிர்க்கட்சித் தலைவராக யாரை தேர்தெடுப்பது என்பது குறித்து வெற்றி பெற்ற சட்டப்பேரவை உறுப்பினர்கள் கடந்த 7-ம் தேதி அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி உள்ளிட்டோர் தலைமையில் கூடி ஆலோசனை நடத்தினர்.

அதில் எந்த முடிவும் எட்டப்படாததால், இன்று மீண்டும் ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் கூடி முடிவெடுக்க தீர்மானித்தனர். இந்நிலையில் இன்றுமுதல் 14 நாட்களுக்கு முழு ஊரடங்கு அமல் படுத்தப்பட்டுள்ளதால் ஏற்கெனவே திட்டமிட்டபடி அதிமுக சட்டப் பேரவை உறுப்பினர்கள் கூட்டம் நடத்த அனுமதி கோரி அதிமுக மாவட்ட செயலாளர்களில் ஒருவரும், முன்னாள் எம்பியுமான நா.பாலகங்கா காவல் ஆணையர் அலுவலகத்தில் மனு அளித்தார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், விதிமுறைகளை முறையாக கடைபிடித்து தொண்டர்கள் இல்லாமல் கூட்டம் நடத்த அனுமதி கோரி மனு அளித்துள்ளதாக தெரிவித்தார். மேலும் டிஜிபி அலுவலகத்திலும் அதிமுக சார்பில் மனு அளிக்கப்பட்டது. இந்நிலையில், அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டத்துக்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x