Published : 10 May 2021 06:24 AM
Last Updated : 10 May 2021 06:24 AM

திருப்பரங்குன்றம் வைகாசி விசாக விழா ரத்து :

மதுரை

திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயில் துணை ஆணையர் மு.ராமசாமி வெளியிட்ட செய்திக்குறிப்பு:

கரோனா 2-ம் அலையைக் கட்டுப்படுத்த ஊரடங்கு அமலில் இருப்பதால் திருப் பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் வைகாசி மாதத் திருவிழாக்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. அதன்படி மே 12-ல் நடைபெறவிருந்த கார்த்திகை மாத திருவிழா, மே 16-ல் நடைபெறவிருந்த வைகாசி வசந்த உற்சவம், மே 25-ல் வைகாசி விசாகம் (பால்குடம்), ஜூன் 26-ம் தேதி பவுர்ணமி கிரிவலம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. எனவே, பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் இந்நாட்களில் கோயிலுக்கு வருவதைத் தவிர்க்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x