Published : 10 May 2021 06:24 AM
Last Updated : 10 May 2021 06:24 AM
திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயில் துணை ஆணையர் மு.ராமசாமி வெளியிட்ட செய்திக்குறிப்பு:
கரோனா 2-ம் அலையைக் கட்டுப்படுத்த ஊரடங்கு அமலில் இருப்பதால் திருப் பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் வைகாசி மாதத் திருவிழாக்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. அதன்படி மே 12-ல் நடைபெறவிருந்த கார்த்திகை மாத திருவிழா, மே 16-ல் நடைபெறவிருந்த வைகாசி வசந்த உற்சவம், மே 25-ல் வைகாசி விசாகம் (பால்குடம்), ஜூன் 26-ம் தேதி பவுர்ணமி கிரிவலம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. எனவே, பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் இந்நாட்களில் கோயிலுக்கு வருவதைத் தவிர்க்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT