Published : 07 May 2021 03:12 AM
Last Updated : 07 May 2021 03:12 AM
கோவை மாவட்டத்தில் மருத்துவமனைகளுக்கு தேவையான ஆக்சிஜன் தட்டுப்பாடின்றி கிடைப்பதை உறுதிசெய்ய 6 அதிகாரிகள் அடங்கிய கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக கோவை மாவட்ட ஆட்சியர் எஸ்.நாகராஜன் வெளியிட்டுள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது:
கரோனா தொற்றுக்கு சிகிச்சை அளிப்பதில் ஆக்சிஜன் முக்கிய பங்கு வகிக்கிறது. எனவே, மாவட்ட தொழில் மைய பொதுமேலாளர், சுகாதாரத்துறை இணை இயக்குநர், கோவை மாநகர காவல்துறை சட்டம், ஒழுங்கு உதவி ஆணையர், கோவை (மைய) வட்டார போக்குவரத்து அலுவலர்,கோவை வடக்கு மாவட்ட டாஸ்மாக் மேலாளர், மருந்து கட்டுப்பாட்டுத்துறை உதவி இயக்குநர் ஆகியோர் அடங்கிய கண்காணிப்பு குழு அமைக்கப்படுகிறது.
மாவட்டத்தில் மருத்துவ ஆக்சிஜன் இருப்பு, விநியோகம், தேவை, போக்குவரத்து ஆகிய வற்றை கண்காணிப்பது, மாவட்ட ஆக்சிஜன் கண்காணிப்பு குழுவின் பொறுப்பாகும். கோவையில் உள்ள சுகாதாரத்துறை இணை இயக்குநர் ஆக்சிஜன் வசதியுடன் கூடிய படுக்கைகள், தீவிர சிகிச்சை பிரிவு, வென்டிலேட்டர் உதவியுடன் எத்தனை பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்ற விவரத்தை சேகரிக்க வேண்டும். அதற்கேற்றவாறு மருத்துவமனைகளுக்கு தினமும் தேவையான ஆக்சிஜன் அளவைக் கணக்கிட வேண்டும்.
மேலும், முந்தைய பயன் பாட்டை வைத்து, ஒருநாளைக்கு எவ்வளவு ஆக்சிஜன் பயன்படுத்தப் படுகிறது, வரும் வாரங்களில் கரோனாவால் எவ்வளவு நோயாளி கள் பாதிக்கப்படுவார்கள் என்பதைதோராயமாக கணக்கிட வேண்டும். மாவட்ட தொழில் மைய மேலாளர் தேவைக்கேற்ற ஆக்சிஜன் இருப்பு,விநியோகத்தை சுகாதாரத்துறை யுடன் இணைந்து ஒருங்கிணைக்க வேண்டும்.
காவல்துறை, போக்குவரத்து துறையினர் ஆக்சிஜனை ஏற்றிச்செல்லும் லாரிகள் மாவட்டத்துக்குள் பாதுகாப்பாக இயங்குவதை உறுதி செய்ய வேண்டும். ஆக்சிஜன் இருப்பு, தேவை, வாங்குவதில் தேவைப்படும் உதவிகள் குறித்து தெரிவிக்க 24 மணி நேரமும்செயல்படும் உதவி எண்ணை சுகாதாரத்துறை இணை இயக்குநர் தெரிவிக்க வேண்டும். ஆக்சிஜன் வருகை, விநியோகம், இருப்பு விவரங்களை மருந்து கட்டுப்பாட்டு துறை உதவி இயக்குநர் தினந்தோறும் தவறாது மாவட்ட ஆட்சியரிடம் அறிக்கையாக அளிக்க வேண்டும்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப் பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT