Published : 07 May 2021 03:12 AM
Last Updated : 07 May 2021 03:12 AM

மேட்டுப்பாளையம்-கோவை பயணிகள் ரயில் நாளை முதல் ரத்து :

கோவை

கரோனா பரவல் காரணமாக மேட்டுப்பாளையம் முதல் கோவை வரை தினமும் 5 முறை இயக்கப்பட்ட பயணிகள் ரயில் சேவை, கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் நிறுத்தப்பட்டது.

ஓராண்டுக்குப்பிறகு கடந்த மார்ச் 15-ம் தேதி இந்த ரயில் சேவை மீண்டும் தொடங்கியது. ஞாயிற்றுக்கிழமை தவிர மற்ற 6 நாட்களும் இந்த ரயில் இயங்கி வந்தது.

இந்நிலையில், சேலம் கோட்ட ரயில்வே அலுவலகம் நேற்று வெளியிட்ட செய்திக் குறிப்பில், "மேட்டுப்பாளையம்-கோவை பயணிகள் சிறப்பு ரயில் (எண்:06009), கோவை-மேட்டுப்பாளையம் சிறப்பு ரயில் (எண்:06010) வரும் 8-ம் தேதி முதல் 31-ம் தேதி வரைதற்காலிகமாக ரத்துசெய்யப்படுகிறது"என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x