Published : 06 May 2021 03:13 AM
Last Updated : 06 May 2021 03:13 AM

படுக்கைகள், ஆக்சிஜன் தட்டுப்பாடு இல்லை அவதூறு பரப்பினால் நடவடிக்கை : கிருஷ்ணகிரி மருத்துவக் கல்லூரி முதல்வர் எச்சரிக்கை

கிருஷ்ணகிரி

கரோனா நோயாளிகளுக்கு தேவையான படுக்கைகள், ஆக்சிஜன் தட்டுப்பாடு இல்லை, அவதூறு பரப்பினால் நடவடிக்கை எடுக்கப்படும் என கிருஷ்ணகிரி மருத்துவக்கல்லூரி முதல்வர் முத்துச்செல்வன் எச்சரிக்கை விடுத்தார்.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர் களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்நிலையில், மாவட்டத்தில் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் படுக்கை மற்றும் ஆக்சிஜன் பற்றாக்குறை உள்ளதாக நேற்று தகவல்கள் வெளியானது. இதுதொடர்பாக கிருஷ்ணகிரி மாவட்ட அரசுமருத்துவக்கல்லூரி மருத்துவ மனை முதல்வர் முத்துச்செல்வன் கூறியதாவது:

கிருஷ்ணகிரி மாவட்டத்தில், அரசு சார்பில், பர்கூர், ஓசூர் சிறப்பு சிகிச்சை மையங்கள் உட்பட 1,500-க்கும் மேற்பட்ட படுக்கை வசதிகள் தயார் நிலையில் உள்ளன. மேலும், பல்வேறு தனியார் மருத்துவமனைகளிலும் சிறப்பு சிகிச்சை மையங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. அவற்றிலும், 300-க்கும் மேற்பட்டோர் சிகிச்சைபெற்று வருகின்றனர். அரசு மருத்துவமனைகளில் 40 சதவீதத்துக்கும் மேற்பட்ட படுக்கைகள் காலியாகவே உள்ளன. வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டவர்களின் எண்ணிக்கை, 2 ஆயிரத்தை கடந்துள்ளது. அவர்கள் தனிமைப்படுத்தப்படவில்லை, பாதுகாக்கப் பட்டு வருகிறார்கள். அவர்களுக்கு, உறவினர் ஒருவர் ஆதரவாக இருந்தால் போதும். மேலும் குப்புறப்படுத்து உறங்குவது, ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும்.

செல்போன் பார்ப்பதை குறைக்க வேண்டும். பதற்றம் இல்லாமல் தைரியமாக இருந்து, கரோனாவை எதிர்கொள்ள வேண்டும். அப்படி செய்தால் 98 சதவீதம் வீட்டிலிருந்தபடியே குணமாகும் வாய்ப்பு கிடைக்கும். அபாய கட்டத்தில் இருப்பவர்களை போராடி கண்டிப்பாக மீட்க முடியும். இதேபோல், ஆக்சிஜன் பற்றாக்குறைக்கு தற்போதைக்கு வாய்ப்பில்லை. அரசு அறிவுரைப் படி அவ்வப்போது இருப்பு அளவுகளை தொடர்ந்து தெரிவித்து வருகிறோம். ஒவ்வொரு 36 மணி நேரத்திற்கு ஒரு முறை 12 ஆயிரம் லிட்டர் ஆக்சிஜன் நிரப்பி வருகிறோம். மேலும் வரும் காலங்களில் மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு வருவோர் எண்ணிக்கை அதிகரிக்கும் நிலைஇருப்பதால், அதற்கான படுக்கைவசதிகளை தற்போதே ஏற்படுத்தி இருக்கிறோம். படுக்கை, ஆக்சிஜன்தட்டுப்பாடு குறித்து சமூக வலை தளங்களில் அவதூறு பரப்பினால் நடவடிக்கை எடுக்கப்படும், என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x