Published : 01 May 2021 03:16 AM
Last Updated : 01 May 2021 03:16 AM
பரமக்குடி நகர் ஹோட்டல் உரிமையாளர் சங்க நிர்வாகிகள் அப்துல், செயலாளர் பெரியசாமி, பொருளாளர் ராபர்ட் ஆகியோர் அரசுக்கு அனுப்பிய கோரிக்கை மனு: கரோனா இரண்டாம் அலையின் தீவிரத்தால், தமிழக அரசு அனைத்து உணவகங்களிலும் பார்சல் மட்டுமே வழங்க அனுமதித்துள்ளது. இதனால், உணவகத் தொழில் கடும் நெருக்கடியைச் சந்தித்துள்ளது. உணவகங்களில் தயாராகும் உணவுகள் வாடிக்கையாளர்கள் வருகை இன்றி வீணாகின்றன. மேலும், வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு சம்பளம் அளிக்கும் அளவுக்குக் கூட வியாபாரம் நடப்பதில்லை.
ஆகையால், 50 சதவீத வாடிக்கையாளர்கள் அமர்ந்து உண்ண அனுமதி அளிக்க வேண்டும். அரசின் விதிமுறைகளைக் கடைப்பிடித்து அரசுக்கு ஒத்துழைப்பு வழங்குவோம், எனக் கூறப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT