Published : 27 Apr 2021 06:30 AM
Last Updated : 27 Apr 2021 06:30 AM

தொல்காப்பியர் பிறந்த தினம் :

தமிழ் புலவர் தொல்காப்பியரின் பிறந்த தினம் கன்னியாகுமரி மாவட்டத்தில் கொண்டாடப்பட்டது. விளவங்கோடு வட்டம்காப்பிக்காட்டில் உள்ள தொல்காப்பியர் சிலைக்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் பத்மநாபபுரம் சார் ஆட்சியர் சிவகுரு பிரபாகரன் மாலை அணிவித்து மரியாதைசெய்தார். ஆரல்வாய்மொழி அறிஞர் அண்ணா கல்லூரி முன்னாள் முதல்வர் ஆபத்துகாத்த பிள்ளை, சிவகாசி ஜானகிஅம்மாள் தன்னாட்சி கல்லூரிபேராசிரியர் சிவனேசன் ஆகியோருக்கு தொல்காப்பியர் விருதும், கரோனா காலத்தில் பொதுமக்களிடையே விழிப்புணர்வு பாடல்கள் மூலம் சிறந்த கருத்துகளை பதிவு செய்த பள்ளிமாணவர் தீரஜுக்கு பாராட்டு சான்றிதழும் வழங்கப்பட்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x