Published : 21 Apr 2021 03:16 AM
Last Updated : 21 Apr 2021 03:16 AM

ஆண்டிபட்டி அருகே : கிணற்றில் விழுந்து இளைஞர் மரணம் :

ஆண்டிபட்டி: தேனி மாவட்டம், ஆண்டிபட்டி அருகே முல்லையம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் மணிகண்டன்(30). விவசாய கூலித் தொழிலாளி. இவருக்கும் மதுரையைச் சேர்ந்த அம்மாபிள்ளை என்ற பெண்ணுக்கும் 3 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. ஆனால், குழந்தைகள் இல்லை. இந்நிலையில் குடும்பப் பிரச்சினையால் கடந்த ஓராண்டாக அவர்கள் பிரிந்து வாழ்ந்தனர். இதனால் மன வருத்தத்தில் இருந்த மணிகண்டன், வீட்டை விட்டு நேற்று முன்தினம் வெளியே சென்றார். உறவினர்கள் அவரைத் தேடிய நிலையில், அதே கிராமத்தில் உள்ள கிணற்றில் அவரது உடல் கிடந்தது. ராஜதானி போலீஸார் அவரது உடலை மீட்டு விசாரிக்கின்றனர

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x