Published : 16 Apr 2021 03:13 AM
Last Updated : 16 Apr 2021 03:13 AM
கரூர்: கரூர் மாவட்டம் தோகைமலை அருகேயுள்ள நல்லாகவுண்டம்பட்டியைச் சேர்ந்தவர் ஆறுமுகம் (30). மாட்டுத் தரகர். இவருக்கு திருமணமாகி 3 குழந்தைகள் உள்ளன. கலிங்கப்பட்டியைச் சேர்ந்தவர் சிவபாக்கியம் (27). திருமணமாகி விவாகரத்து பெற்றவர். கரூர் நீதிமன்றத்தில் அலுவலக உதவியாளராக பணியாற்றி வந்தார். இவர்கள் இருவரிடையே தொடர்பு இருந்துள்ளது. இதனை அறிந்த இரு குடும்பத்தினரும் அவர்களை கண்டித்துள்ளனர்.
இந்நிலையில், நல்லாகவுண்டம்பட்டியில் உள்ள ஒரு தோட்டத்தில் நேற்று முன்தினம் இரவு சிவபாக்கியம் விஷம் குடித்தும், ஆறுமுகம் தூக்கில் தொங்கியும் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இதுகுறித்து தோகைமலை போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT