Published : 09 Apr 2021 03:13 AM
Last Updated : 09 Apr 2021 03:13 AM

முகக்கவசம் அணியாதவர்களுக்கு ரூ.500 அபராதம் :

கரோனா தொற்று தடுப்பு நடவடிக்கைகள் குறித்து திருப்பத்தூர் நகராட்சி ஆணையாளர் சத்தியநாதன் கூறும்போது, “திருப்பத்தூர் நகராட்சிக்கு உட்பட்ட பிரதான சாலைகள், தெருக்கள் முழுவதும் கிருமி நாசினி தெளித்தல் உள்ளிட்ட பணிகளுக்கு 7 குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன. இது தவிர முகக்கவசம் அணியாதது, வாடிக்கையாளர்களுக்கு கிருமிநாசினி வழங்காதது, சமூக இடைவெளியை பின்பற்றாத கடைகள், வியாபார நிறுவனங்கள் போன்ற இடங்களை கண்காணித்து, விதிமீறுபவர்களுக்கு கடும் அபராதம் விதிக்க சுகாதார ஆய்வாளர்கள் கொண்ட 3 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

இக்குழுவினர் நாளை (இன்று) முதல் திருப்பத்தூர் நகராட்சி முழுவதும் நகர பகுதியை கண்காணிப்பார்கள். மேலும், காய்ச்சல் பாதிப்பு கண்டறிய தினசரி 6 இடங்களில் காய்ச்சல் பரிசோதனை முகாம், கரோனா பரிசோதனை மருத்துவ முகாம் நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது. அதேபோல, முகக்கவசம் அணியாமல் வெளியே சுற்றுபவர்களை கண்டறிந்தால் ரூ.500 வரை அபராதம் விதிக்கப்படும்’’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x