Published : 07 Apr 2021 03:17 AM
Last Updated : 07 Apr 2021 03:17 AM
அரியலூர்: அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் சட்டப்பேரவைத் தொகுதியில் ஐஜேகே சார்பில் மறைந்த வன்னியர் சங்கத் தலைவர் காடுவெட்டி குருவின் மனைவி சொர்ணலதா போட்டியிட்டார். இவருக்கு ஆதரவு தெரிவித்து அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் முதன்மை பொதுச் செயலாளர் ராதிகா சரத்குமார், ஐஜேகே நிறுவனர் பாரிவேந்தர், ஐஜேகே கட்சித் தலைவர் ரவி பச்சமுத்து ஆகியோர் பிரச்சாரம் மேற்கொண்டனர். இந்நிலையில், உடல் நிலை சரியில்லாத காரணத்தால் மருத்துவமனையில் சொர்ணலதா நேற்று முன்தினம் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதன் காரணமாக நேற்று நடைபெற்ற வாக்குப்பதிவின்போது, சொர்ணலதா வாக்களிக்கவில்லை.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT