Published : 07 Apr 2021 03:18 AM
Last Updated : 07 Apr 2021 03:18 AM

கவச உடையணிந்து வந்த இருவர் :

தி.மலை மாவட்டத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு 136 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்கள் விருப்பப்பட்டால், கடைசியாக வாக்களிக்கலாம் என தேர்தல் ஆணையம் அறிவித்தது. அதன்படி, செய்யாறு சட்டப்பேரவைத் தொகுதிக்கு உட்பட்ட ஒருவர், தான் வாக்களிக்க விரும்புவதாக தெரிவித்திருந்தார். இறுதியில், அவரும் வாக்களிக்க விரும்பவில்லை என தெரிவித்துவிட்டார். இந்நிலையில் திருவண்ணாமலை அடுத்த சே.கூடலூர் கிராமத்தில் உள்ள ஒரு வாக்குச்சாவடியில் உடல் வெப்பம் அதிகமாக இருந்ததால் கரோனா தடுப்பு கவச உடை அணிந்து நேற்று காலை வாக்களிக்க சென்ற 2 பேரை, மாலை 6 மணியளவில் வருமாறு கூறி வாக்குச்சாவடி அலுவலர் திருப்பி அனுப்பி வைத்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x