Published : 06 Apr 2021 03:15 AM
Last Updated : 06 Apr 2021 03:15 AM
தளி தொகுதியில் விதிமுறை களுக்கு முரணாக தங்கியுள்ள கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்தவர் களை தேர்தல் ஆணையம் உடனே வெளியேற்ற வேண்டும், என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.
இதுகுறித்து அக்கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் நேற்று வெளியிட்ட அறிக்கை:
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தளி சட்டப்பேரவை தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளருக்கு ஆதரவாக, தேர்தல் விதிகளுக்கு எதிரான செயல்கள் தொடர்ந்து நடந்து வருகின்றன. கர்நாடக மாநிலத்தில் இருந்து பாஜக அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், எம்.பிக்கள் ஆகியோர் தளி தொகுதியில் தங்கி அங்கு கலவரச் சூழலை ஏற்படுத்தி வருகின்றனர். இவர்கள் மூலம் வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா நடைபெற்று வருகிறது. தேர்தலின்போது பல வாக்குச் சாவடிகளில் கலவரம் ஏற்படுத்தவும்கூடும்.
தளி தொகுதியில் தேர்தலை நிறுத்தி வைப்பதே அவர்களின் முயற்சியாக உள்ளது. இவ்வாறு பாஜக தங்கள் ஆட்சி அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி விதிமீறல்கள் செய்து வருவதை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கண்டிக்கிறது.
இவ்விவகாரத்தில் தலைமை தேர்தல் ஆணையர் தலையிட்டு துரிதமாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.தளி தொகுதியில் விதிமுறை களுக்கு முரணாக தங்கியுள்ளகர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த வர்களை உடனே வெளியேற்ற வேண்டும். மேலும், தேர்தல் நடுநிலையுடன் நடத்தப்படுவதை உறுதிப்படுத்த வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT