Published : 05 Apr 2021 03:16 AM
Last Updated : 05 Apr 2021 03:16 AM

அரியலூர் தொகுதி அதிமுக வேட்பாளர் இறுதிக் கட்ட தேர்தல் பிரச்சாரம் :

அரியலூர்: அரியலூர் தொகுதி அதிமுக வேட்பாளர் தாமரை எஸ்.ராஜேந்திரன் நேற்று அரியலூர் தெற்கு ஒன்றியத்துக்கு உட்பட்ட சின்னநாகலூர், பெரியநாகலூர், ஆதித்ய பிர்லா குடியிருப்பு, வி.கைகாட்டி, கடைவீதி உள்ளிட்ட பகுதிகளில் இறுதிக் கட்ட பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது, என்னை மீண்டும் சட்டப்பேரவை உறுப்பினராக தேர்ந்தெடுத்தால், வி.கைகாட்டி- அரியலூர் சாலை விரிவுபடுத்தப்படும். சிமென்ட் ஆலைகளுக்கு செல்லும் கனரக வாகனங்களுக்கென தனிச்சாலை அமைக்கப்படும். தூய்மையான குடிநீர் மக்களுக்கு கிடைக்க தண்ணீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்படும். மாவட்டத்தில் தொழிற்பேட்டை அமைக்கப்படும் என்று உறுதியளித்தார்.

பின்னர், வி.கைகாட்டி நான்கு வழிச் சாலையில் உள்ள இளநீர் கடையில் வேட்பாளர் ராஜேந்திரன் பொதுமக்களுக்கு இளநீர் வெட்டி கொடுத்தும், துண்டுப்பிரசுரம் வழங்கியும் வாக்கு சேகரித்தார்.

இதில், பாமக மாநில துணைத் தலைவர் சின்னதுரை, அதிமுக தெற்கு ஒன்றியச் செயலாளர் பாலசுப்பிரமணியன், அரியலூர் ஒன்றிய எம்ஜிஆர் மன்ற இணைச் செயலாளர் ரவிச்சந்திரன் மற்றும் பாமக, தமாகா, பாஜக உள்ளிட்ட கூட்டணிக் கட்சி நிர்வாகிகள் பலரும் கலந்துகொண்டு வாக்குசேரித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x