Published : 05 Apr 2021 03:16 AM
Last Updated : 05 Apr 2021 03:16 AM

தி.மலை மாவட்டத்தில் : கரோனா தொற்று மீண்டும் அதிகரிப்பு :

திருவண்ணாமலை மாவட்டத்தில் கரோனா தொற்று பரவல் மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது.

திருவண்ணாமலை மாவட்டத்தில் கடந்த 2 மாதங்களாக கரோனா தொற்று பரவல் குறைந்திருந்தது. ஒற்றை இலக்கில் இருந்த தினசரி பாதிப்பானது, கடந்த இரண்டு நாட்களாக அதிகரித்துள்ளது. கரோனா பாதிப்பு 37-ஆக இருந்ததாக நேற்று முன் தினம் அறிவிக்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாக, மேலும் 29 பேருக்கு தொற்று பரவி உள்ளதாக நேற்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை, 19,801-ஆக உயர்ந்துள்ளது. கரோனா தொற்றில் இருந்து 19,379 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். 136 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை சிகிச்சை பலனின்றி 286 பேர் உயிரிழந்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x