Published : 25 Mar 2021 03:16 AM
Last Updated : 25 Mar 2021 03:16 AM
மார்ச் 24-ம் தேதி உலக காசநோய் தினம் அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி, கன்னியாகுமரி மாவட்டத்தில் இந்த மாதம் தொடக்கம் முதல் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்து வருகிறது. கன்னியாகுமரி காந்தி மண்டபம் அருகே காசநோய் விழிப்புணர்வு பதாகைகள் நேற்று பலூன்களில் கட்டி பறக்கவிடப்பட்டது.
அப்போது அங்கு நின்ற சுற்றுலா பயணிகள், பொதுமக்களிடம் 2025-ம் ஆண்டுக்குள் காசநோயை ஒழிக்க சபதமேற்போம் என கையெழுத்து இயக்கம் நடத்தப்பட்டது. மாவட்ட மருத்துவ பணிகள் துணை இயக்குநர் (காசநோய்) வி.பி.துரை தலைமை வகித்தார்.
மருத்துவர்கள் ரமேஷ், முத்துகுமார், அகமது கபீர் மற்றும் காசநோய் பணியாளர்கள் கலந்துகொண்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT