Published : 23 Mar 2021 03:14 AM
Last Updated : 23 Mar 2021 03:14 AM

கரோனா தொற்று பரவுவதால் கிராமங்களில் - சமூக இடைவெளியுடன் பிரச்சாரம் செய்ய வேண்டும் : நிர்வாகிகளுக்கு வேட்பாளர் வேண்டுகோள்

கரோனா தொற்று பரவுவதால் வேட்பாளருடன் கூட்டம், கூட்டமாக சுற்றாமல் நிர்வாகிகள் அனைவரும் சமூக இடைவெளியுடன் கிராமப் பகுதிகளில் பிரச்சாரங்களில் ஈடுபட வேண்டும் என அதிமுக கூட்டணி சார்பிலான செயல்வீரர்கள் கூட்டத்தில் திருப்போரூர் சட்டப்பேரவை தொகுதியில் பாமக வேட்பாளர் தெரிவித்தார்.

செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூர் சட்டப்பேரவை தொகுதியில் அதிமுக கூட்டணி சார்பில் பாமக வேட்பாளர் திருக்கச்சூர் ஆறுமுகம் போட்டியிடுகிறார். இந்நிலையில், தேர்தல் பணிகள் மற்றும் பிரச்சாரங்கள் மேற்கொள்வது தொடர்பாக அதிமுக கூட்டணி சார்பில் செயல் வீரர்கள் கூட்டம் நேற்று திருப்போரூரில் நடைபெற்றது.

இதில், பாமக வேட்பாளர் ஆறுமுகம் பேசியதாவது:

திருப்போரூர் தொகுதியில் அதிமுக கூட்டணிக்கு வெற்றி வாய்ப்பு அதிகமாக உள்ளது. எனினும், கட்சி நிர்வாகிகள் தீவிரமாக செயல்பட வேண்டும். கரோனா தொற்று அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது. எனவே கூட்டணி கட்சியின் நிர்வாகிகள் தனிநபர் இடைவெளியை கடைபிடித்து பாதுகாப்புடன் வாக்கு சேகரிக்க வேண்டும். வாக்கு சேகரிக்க வேட்பாளருடன் சுற்றாமல் அந்தந்த பகுதியில் உள்ள நிர்வாகிகள், அவர்கள் வசிக்கும் கிராமங்களில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட வேண்டும் என்றார்.

இக்கூட்டத்தில், பாமக துணை பொதுச் செயலாளர் ஏ.கே.மூர்த்தி, அதிமுக மாவட்ட செயலாளர் ஆறுமுகம், கூட்டணி கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x