Published : 23 Mar 2021 03:14 AM
Last Updated : 23 Mar 2021 03:14 AM

ஊத்துக்கோட்டையில் உரிய ஆவணமின்றி - காரில் எடுத்துச் செல்லப்பட்ட ரூ.2.75 லட்சம் பறிமுதல் :

திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி தொகுதிக்கு உட்பட்ட ஊத்துக்கோட்டை சோதனைச் சாவடியில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, அவர்கள் ஆந்திர பகுதியிலிருந்து, ஊத்துக்கோட்டைக்கு வந்த காரை நிறுத்தி சோதனை செய்தனர்.

அந்த காரில் ரூ. 2.75 லட்சம்பணம் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து, காரில் இருந்தஆந்திர மாநிலம், சித்தூர் பகுதியைச் சேர்ந்த வெங்கடேசலு(50) என்பவரிடம் தேர்தல் பறக்கும் படையினர் விசாரணை நடத்தினர். அவ்விசாரணையில், ஊத்துக்கோட்டையை சேர்ந்த உறவினர் செலுத்திய சீட்டுப்பணத்தை, அவருக்கு அளிப்பதற்காக எடுத்துச் சென்றது தெரிய வந்தது.

உரிய ஆவணமின்றி எடுத்துச் செல்லப்பட்ட அத்தொகையை பறிமுதல் செய்த தேர்தல் பறக்கும் படையினர், தேர்தல் அலுவலர் மூலம் கும்மிடிப்பூண்டி சார் கருவூலத்தில் ஒப்படைத்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x