Published : 23 Mar 2021 03:14 AM
Last Updated : 23 Mar 2021 03:14 AM

கேளம்பாக்கம் தபால் நிலையத்தில் - டாக்டர். சூசன் மார்த்தாண்டன் தபால் தலை வெளியீடு :

கேளம்பாக்கம் தபால் நிலையத்தில் டாக்டர். சூசன் மார்த்தாண்டன் உருவம் பொறித்த தபால் தலை வெளியீடு.

சென்னை

தாம்பரம் கோட்டத்துக்கு உட்பட்ட கேளம்பாக்கம் பகுதியில் புதிதாக துணை தபால் நிலையம் திறக்கப்பட்டது.

விழாவில் இந்துஸ்தான் கலை மற்றும் அறிவியல் கல்லூரி இயக்குநர் டாக்டர். சூசன் மார்த்தாண்டன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு தபால் நிலையத்தை ரிப்பன் வெட்டியும் குத்துவிளக்கு ஏற்றியும் திறந்து வைத்தார்.

அவரின் சிறப்புரையில், 40 ஆண்டுகளுக்கு மேலாக தபால் நிலையத்தோடு கொண்ட இளமை கால நிகழ்வுகளைப் பகிர்ந்துகொண்டார். கேளம்பாக்கம் சுற்று வட்டார மக்களின் வளர்ச்சியில் இந்துஸ்தான் கல்லூரியின் பங்கு அதிகம். தகவல் தொடர்பில் மாற்றங்கள் பல வந்தாலும் மாறாதது அஞ்சலகம் மட்டும்தான். நாட்டின் வளர்ச்சியிலும் முன்னேற்றத்திலும் துணை நிற்கும் தபால் நிலையங்கள் போல, ஏழை மாணவர்களின் வளர்ச்சிக்கு இந்துஸ்தான் கல்லூரி எப்போதும் துணை நிற்கும் என்றார்.

இந்நிகழ்வில் டாக்டர். சூசன் மார்த்தாண்டன் உருவம் பொறித்த தபால்தலை வெளியிடப்பட்டது. விழாவில்கல்லூரி முதல்வர் சீ.திருமகன், துணைமுதல்வர் சாமுவேல் சம்பத்குமார்,தாம்பரம் கோட்ட இயக்குநர், தபால் நிலைய மேலாளர், முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x