Published : 07 Mar 2021 03:17 AM
Last Updated : 07 Mar 2021 03:17 AM

ஜோலார்பேட்டையில் : மண்ணுளி பாம்பு மீட்பு :

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை ரயில் நிலையத்தில் ரயில்வே பாதுகாப்பு படை காவலர்கள் நேற்று முன்தினம் இரவு ரோந்துப் பணியில் ஈடுபட்டனர். அப்போது, ரயில் நிலைய வளாகத்தில் சுமார் 4 அடி நீளமுள்ள மண்ணுளி பாம்பு இருப்பதை கண்டறிந்தனர். மண்ணுளி பாம்பை மீட்டு தனியாக பிளாஸ்டிக் வாளியில் வைத்து ரயில்வே பாதுகாப்பு படையினர் வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர்.

அதன்பேரில், திருப்பத்தூர் வனத்துறை அதிகாரிகள் விரைந்து சென்று, அந்த மண்ணுளி பாம்பை மீட்டு ஏலகிரி வனப்பகுதியில் விட்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x