Published : 05 Mar 2021 03:16 AM
Last Updated : 05 Mar 2021 03:16 AM
சோதனையில் டின் பீர் பாட்டில்கள் பறிமுதல்
திருப்பூர்: திருப்பூர் வடக்கு சட்டப்பேரவைத் தொகுதிக்கு உட்பட்ட ஊத்துக்குளி சாலை குளத்துப்பாளையம் சோதனைச்சாவடியில், பறக்கும் படையினர் நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அந்த வழியாக வந்த காரை சோதனையிட்டபோது, இருக்கையின் பின்புறம் வைக்கப்பட்டிருந்த 20 டின் பீர் பாட்டில்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக, வீரபாண்டியை சேர்ந்த மணிவேல், குருராஜன் ஆகியோரிடம் விசாரணை நடத்தினர். புதுச்சேரியில் இருந்து டின் பீர் பாட்டில்கள் கொண்டு வருவதாக தெரிவித்தனர். இருப்பினும், உரிய ஆவணங்கள் இல்லாததால், அவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT