Published : 01 Mar 2021 03:17 AM
Last Updated : 01 Mar 2021 03:17 AM

நிகழ்ச்சிகள் நடத்த முன் அனுமதி கட்டாயம் காரைக்கால் மாவட்ட தேர்தல் அதிகாரி அறிவிப்பு

காரைக்கால்

காரைக்கால் மாவட்ட தேர்தல் அதி காரியும், ஆட்சியருமான அர்ஜூன் சர்மா நேற்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

இந்திய தேர்தல் ஆணையம், புதுச்சேரி சட்டப்பேரவைக்கான தேர்தல் அறிவிப்பை வெளியிட்ட நிலையில், பிப்.26-ம் தேதி முதல் மாதிரி நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன.

அதன்படி, பொதுமக்கள், அரசி யல் கட்சியினர் நிகழ்ச்சிக்கு 48 மணி நேரத்துக்கு முன்னதாக மாவட்ட தேர்தல் அதிகாரியிடம் அனுமதி பெற்ற பின்னரே விழாக் கள், நிகழ்ச்சிகளை நடத்த வேண்டும்.

சுவரொட்டிகள், விளம்பர பதாகைகள், கட்சிக் கொடிகள், தோரணம், ஆட்டோ விளம்பரங்களுக்கு உரிய முன் அனுமதி பெறவேண்டும். மீறினால் சட்டரீதி யான நடவடிக்கை எடுக்கப்படும். முன் அனுமதி பெற விரும்புவோர் தேர்தல் ஆணையத்தின் https://suvidha.eci.gov.in என்ற இணையதள முகவரி வழியாக விண்ணப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x