Published : 25 Feb 2021 03:15 AM
Last Updated : 25 Feb 2021 03:15 AM

லஞ்சம் வாங்கிய பெண் விஏஓ கைது

ஆவடி அருகே பாலவேடு பகுதியை சேர்ந்தவர் சதீஷ்குமார் தன்னுடைய நிலத்துக்கு பட்டா கேட்டு விண்ணப்பித்துள்ளார். அவரிடம் பாலவேடு கிராம நிர்வாக அலுவலர் துர்காதேவி, பட்டாவுக்கு பரிந்துரைக்க ரூ.2 ஆயிரம் வழங்க வேண்டும் என கேட்டுள்ளார். இதுகுறித்து ஆலந்தூர் லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸாரிடம் சதீஷ்குமார் புகார் தெரிவித்தார்.

பின்னர், லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸாரின் ஆலோசனையின்படி, நேற்று விஏஓ துர்காதேவியிடம் ரசாயன பவுடர் தடவப்பட்ட ரூ.2 ஆயிரத்தை சதீஷ்குமார் அளித்தார்.

அப்போது, அங்கு மறைந்திருந்த இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் உள்ளிட்ட ஒழிப்புத் துறை போலீஸார், துர்கா தேவியை கைது செய்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x