Published : 25 Feb 2021 03:16 AM
Last Updated : 25 Feb 2021 03:16 AM

ஆய்வுதிருப்புவனம்

: திருப்புவனம் அருகே கீழடியில் அகழாய்வுப் பணியை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி பார்வையிட்டார். கீழடியில் 7-ம் கட்ட அகழாய்வை பிப்.13-ம் தேதி முதல்வர் பழனிசாமி காணொலி மூலம் தொடங்கி வைத்தார். இந்தப் பணிகள் தமிழக தொல்லியல்துறை சார்பில் கீழடி, கொந்தகை, அகரம், மணலூர் ஆகிய 4 இடங்களில் நடக்கின்றன. இந்நிலையில் கீழடியில் சென்னை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி ஆய்வு செய்தார். அவருக்கு அகழாய்வு குறித்து தொல்லியல் துறையினர் விளக்கினர். திருப்புவனம் நீதிபதி அச்சுதன் உடன் இருந்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x