Published : 25 Feb 2021 03:16 AM
Last Updated : 25 Feb 2021 03:16 AM

திருச்சியில் பொது காப்பீட்டு ஊழியர்கள் வேலைநிறுத்தம்

திருச்சி

அனைத்து ஊழியர்களுக்கும் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். ஊதிய உயர்வு பேச்சுவார்த்தையை உடனே தொடங்க வேண்டும். குடும்ப ஓய்வூதியத்தை 30 சதவீதம் உயர்த்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நாடு முழுவதும் பொது காப்பீட்டு ஊழியர்கள் அகில இந்திய தொழிற்சங்கத்தினர் நேற்று காலை 11.30 மணி முதல் பிற்பகல் 1.30 வரை பணிப் புறக்கணிப்பு செய்தனர்.

அதன்படி, திருச்சி உறையூர் சாலை ரோட்டில் உள்ள ஓரியண்டல் இன்சூரன்ஸ் அலுவலகம் முன்பாக நடைபெற்ற வேலைநிறுத்த போராட்டத்துக்கு, கிளைச் செயலாளர் வத்சன் தலைமை வகித்தார். ஏஐடியுசி திருச்சி மாவட்ட பொதுச் செயலாளர் க.சுரேஷ், அகில இந்திய வங்கி ஊழியர் சங்க திருச்சி மாவட்ட பொதுச் செயலாளர் ராமராஜ் உள்ளிட்டோர் கலந்துகொண்டு, போராட்டத்தை ஆதரித்து பேசினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x