Published : 24 Feb 2021 03:18 AM
Last Updated : 24 Feb 2021 03:18 AM
ஓசூர்
ஓசூர் சிப்காட்-2 துணை மின் நிலையத்தில் ஏரியல் பன்ச் கேபிள் அமைக்கும் பணி நடைபெறுவதால் இன்று (24-ம் தேதி) மற்றும் 26-ம் தேதி காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை மின்நிறுத்தம் செய்யப்படுகிறது.
இதையடுத்து, சிப்காட் 2 துணை மின்நிலையத்துக்கு உட்பட்ட சிப்காட்பகுதி - 2, பத்தலப்பள்ளி, குமுதேப் பள்ளி, பேரண்டப்பள்ளி, தொரப்பள்ளி அக்ரஹாரம், கதிரேப்பள்ளி மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது.
என ஓசூர் கோட்ட மின்வாரியத்துறை செயற்பொறியாளர் (இயக்கம் மற்றும் பராமரிப்பு) குமார் தெரிவித்துள்ளார்.
சேலம்
சேலம் நகரக் கோட்டம் ஜி.ஹெச். மின்பாதையில் நாளை (25-ம் தேதி) அவசர கால பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. எனவே, ராஜாராம் நகர், சங்கர் நகர், அண்ணா பூங்கா ரோடு, காந்தி ஸ்டேடியம் முதல் 4 ரோடு வரையிலான பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்படும் என சேலம் நகரக் கோட்ட மின்வாரிய செயற்பொறியாளர் குணவர்த்தினி தெரிவித்துள்ளார்.Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT