Published : 23 Feb 2021 03:15 AM
Last Updated : 23 Feb 2021 03:15 AM

கிணற்றில் விழுந்த புள்ளிமான் உயிரிழப்பு

திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் தெக்கலூர், கோதபாளையம், சாமந்தன்கோட்டை, மங்கலம், வஞ்சிபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் ஏராளமான புள்ளி மான்கள் வசிக்கின்றன. இந்நிலையில், வஞ்சிபாளையம் அருகே குளத்துதோட்டம் பகுதியிலுள்ள தனியார் தோட்டத்தில் விவசாய கிணறு உள்ளது. நேற்று முன்தினம் இரவு தண்ணீர் தேடி வந்த புள்ளிமான், 40 அடி ஆழமுள்ள அந்த வறண்ட கிணற்றில் தவறி விழுந்துள்ளது.

தகவலறிந்து வனத்துறை மற்றும் நிலைய அலுவலர் பாலசுப்ரமணியன் தலைமையிலான அவிநாசி தீயணைப்புத் துறையினர் நேற்று காலை சென்று, புள்ளிமானை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். கயிறு கட்டி மீட்கும் முயற்சிகள் நடைபெற்றன. இதில் அச்சமடைந்த புள்ளிமான், அங்கும் இங்கும் ஓடி காயமடைந்தது.

வன விலங்கு ஆர்வலரான விஜய் என்பவர் கிணற்றுக்குள் இறங்கி, கயிற்றால் மானை கட்டி வெளியே தூக்கி மீட்கப்பட்டது. ஆனால், மான் உயிரிழந்திருப்பது தெரியவந்தது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x