Published : 11 Feb 2021 03:13 AM
Last Updated : 11 Feb 2021 03:13 AM

புதுமாப்பிள்ளை வெட்டிக் கொலை

மேலூர் அருகே பெ.பனையம் பட்டியைச் சேர்ந்தவர் வீரணன் மகன் வெள்ளைச்சாமி (29). கட்டிடத் தொழிலாளியான இவருக்கு சமீபத்தில் திருமணம் நடந்தது. நேற்று மதியம் இருசக்கர வாகனத்தில் பூதமங் கலம் விலக்கு அருகே சென்ற போது, அவரை 3 பேர் வழிமறித்து அரிவாளால் வெட்டிக் கொலை செய்துவிட்டு தப்பினர். மேலூர் போலீஸார் விசாரிக்கின்றனர். முன்விரோதத்தால் இக்கொலை நடந்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x