Last Updated : 29 Jan, 2021 03:13 AM

 

Published : 29 Jan 2021 03:13 AM
Last Updated : 29 Jan 2021 03:13 AM

காங்கயத்தில் 9-வது நாளாக போராட்டம்

தமிழ்நாடு மின் தொடரமைப்புக் கழகத்தின் விருதுநகர் முதல் திருப்பூர் வரையிலான 765 கிலோவாட் உயர் மின் வழித்தட திட்டத்தை சாலையோரம்புதைவடமாக (கேபிள்) அமைப்பதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

வழக்குகள் நிலுவையில்உள்ளதால், திட்டம் சார்ந்த அனைத்துப் பணிகளையும் நிறுத்திவைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, காங்கயம் அருகே படியூரில் 9-வது நாளாகவிவசாயிகள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். விவசாயிகள் சங்கத்தின் நிறுவனர் ஈசன் தலைமை வகித்தார். தமிழ்நாடு விவசாயிகள் சங்கத் தலைவர் நாராயணசாமி உட்பட பலர் பங்கேற்றனர். அரசின் கவனத்தை ஈர்க்கவேண்டி, முருகனின் படத்துக்கு பூஜை செய்து கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x