Published : 28 Jan 2021 07:18 AM
Last Updated : 28 Jan 2021 07:18 AM
திருவண்ணாமலை: எஸ்.கே.வி பன்னாட்டு பள்ளியில் குடியரசு தினவிழா சிறப்பாக நடைபெற்றது.
திருவண்ணாமலை கீரனூரில் உள்ள எஸ்.கே.வி பன்னாட்டு பள்ளியில் 72-வது குடியரசு தினவிழா நடைபெற்றது. பள்ளியின் தாளாளர் திருநாவுக்கரசு, நிகழ்ச்சியின் முக்கியத்துவம் குறித்துப் பேசினார். பள்ளி முதல்வர் வண்டமர் பூங்குழலி, பொருளாளர் தரன் மற்றும் இயக்குநர் ரவி ஆகியோர் பங்கேற்றனர். சிறப்பு விருந்தினராக பள்ளியின் செயலாளர் பழனி பங்கேற்று சிறப்புரையாற்றினார். பல்வேறு போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சியின் ஏற்பாடுகளை பள்ளியின் ஆசிரியர்கள் செய்திருந்தனர். முடிவில், ஆசிரியர் வடிவேல் நன்றி கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT