Published : 27 Jan 2021 03:18 AM
Last Updated : 27 Jan 2021 03:18 AM
சமத்துவ மக்கள் கட்சியின் தலை வர் சரத்குமார் நேற்று வெளியிட்ட அறிக்கை: அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் தஞ்சை வடக்கு மாவட்ட செயலாளராகப் பொறுப்பு வகித்த குடந்தை என்.ராஜா இன்றுமுதல் தஞ்சை, மயிலாடுதுறை, நாகை, திருவாரூர் ஆகிய மாவட்டங்களை ஒருங்கிணைத்த தஞ்சை மண்டல அமைப்புச் செயலாளராக நியமிக்கப் படுகிறார்.
நீலகிரி மாவட்ட பொறுப்பாளராக கட்சிப் பணியாற்றி வந்த ஆர்.சுரேந்திரன் நீலகிரி மாவட்டச் செயலாளராகவும், கும்பகோணம் நகர இளைஞரணி செயலாளராகப் பொறுப்பு வகித்த ஆனந்த், தஞ்சை வடக்கு மாவட்டச் செயலாளராகவும் நிய மிக்கப்படுகின்றனர். புதிதாக நியமிக்கப்பட்ட மண்டலச் செயலா ளருக்கும், மாவட்டச் செயலாளர் களுக்கும் சம்பந்தப்பட்ட மாவட்டத்தைச் சேர்ந்த நிர்வாகிகள் முழு ஒத்துழைப்பு அளித்து கட்சியின் வளர்ச்சிக்கு உழைக்க வேண்டு்ம் என்று சரத்குமார் கேட்டுக்கொண்டுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT