Published : 27 Jan 2021 03:18 AM
Last Updated : 27 Jan 2021 03:18 AM

பயிர் சேதத்தை முறையாக ஆய்வு செய்யாததால் எதிர்ப்பு

மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடத்தை அடுத்த ஆரப்பள்ளம், பாவட்டமேடு, மலைமான்கோட்டம், நரிமுடுக்கு ஆகிய கிராமங்களில் விவசாயிகள் 600 ஏக்கர் நிலப்பரப்பில் சம்பா சாகுபடி செய்திருந்தனர். இந்நிலையில், அண்மையில் பெய்த கனமழை காரணமாக 90 சதவீதத்துக்கு மேல் நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கி அழுகி சேதமடைந்துள்ளன. இதனால், பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகள் சேதமடைந்த நெற்பயிருக்கு நிவாரணம் மற்றும் 100 சதவீத காப்பீட்டுத் தொகை வழங்க வேண்டும் என அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்நிலையில், வேளாண் துறை அதிகாரிகள் மற்றும் காப்பீடு நிறுவன அதிகாரிகள் ஆரப்பள்ளம் கிராமத்துக்கு நேற்று வந்து, மேடான பகுதியில் உள்ள ஒரு சில ஏக்கர் நிலங்களில் பயிரிடப்பட்டுள்ள நெற்பயிரை ஆய்வுக்காக அறுவடை செய்து சோதனை செய்யும் முயற்சியில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

மழையால் பயிர்கள் சேத மடைந்துள்ள வயல்களில் சோதனை செய்யாமல், அதிகாரிகள் மேடான பகுதியில் ஆய்வுசெய்ய முற்பட்டதால், ஆரப்பள்ளம் விவசாய சங்கத் தலைவர் ராஜேந்திரன், வட்டார விவசாயிகள் சங்க கூட்டமைப்பு பொருளாளர் பாஸ்கரன் மற்றும் விவசாயிகள் ஒன்றுதிரண்டு எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதனால், வேளாண் துறை மற்றும் காப்பீடு நிறுவன அதிகாரிகள் ஆய்வு செய்யாமல் திரும்பிச் சென்று விட்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x