Published : 23 Jan 2021 03:17 AM
Last Updated : 23 Jan 2021 03:17 AM

பேச்சிப்பாறை, பெருஞ்சாணியில் 1,178 கனஅடி தண்ணீர் திறப்பு

கன்னியாகுமரி மாவட்டத்தில் மழை நின்று வெயில் அடித்துவருகிறது.

கும்பப்பூ சாகுபடிக்கு தண்ணீர் தேவைப்படுவதால், அணைகளில் இருந்து தொடர்ச்சியாக தண்ணீர் விநியோகம் செய்ய வேண்டும் என, விவசாயிகள் கோரிக்கை வைத்தனர். இதையடுத்து பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைகளில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. பேச்சிப்பாறை அணையில் நீர்மட்டம் 45.78 அடியாக உள்ள நிலையில், அணையில் இருந்து 727 கனஅடியும், பெருஞ்சாணி அணைநீர்மட்டம் 71.59 அடியாக உள்ளநிலையில், அணையில் இருந்து451 கனஅடியும் என, மொத்தம்1,178 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. பேச்சிப்பாறை அணைக்கு விநாடிக்கு 607 கனஅடியும், பெருஞ்சாணி அணைக்கு 284 கனஅடி தண்ணீரும் உள்வரத்தாக உள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x