Published : 22 Jan 2021 03:19 AM
Last Updated : 22 Jan 2021 03:19 AM

அருமனை, பொற்றையடியில் பெண்களிடம் நகை பறிப்பு

நாகர்கோவில்: அருமனையை அடுத்துள்ள மங்கோட்டை சேர்ந்தவர் மணி. இவரது மனைவி பேபி(55). இவர் வீட்டருகே மேல்புறம் சாலையில் நின்று கொண்டிருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் ஹெல்மெட் அணிந்து வந்த இருவர் பேபியிடம் வீட்டு முகவரி கேட்பது போல் நடித்து அவர் அணிந்திருந்த இரண்டரை பவுன் சங்கிலியை பறித்துச் சென்று விட்டனர். இதுகுறித்து அருமனை போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருவட்டாறைச் சேர்ந்த கண்ணனின் மனைவி உதயசூர்யா(38) என்பவர் பொற்றையடி சென்று விட்டு வீடு திரும்புவதற்காக பேருந்து நிலையத்துக்கு வந்து கொண்டிருந்தார். அப்போது பைக்கில் வந்த இருவர் அவர் அணிந்திருந்த 2 பவுன் சங்கிலியை பறித்துக் கொண்டு தப்பி சென்றனர். இதுகுறித்து தென்தாமரைகுளம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x