Published : 21 Jan 2021 03:15 AM
Last Updated : 21 Jan 2021 03:15 AM

பயிர் நிவாரணம் கேட்டு விளாத்திகுளம், எட்டயபுரத்தில் விவசாயிகள் சங்கம் ஆர்ப்பாட்டம்

தொடர் மழையால் சேதமடைந்த பயிர்களுக்கு நிவாரணம் வழங்க வலியுறுத்தி, விளாத்திகுளம், ஓட்டப்பிடாரம் மற்றும் எட்டயபுரத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

`ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டும். வணிகமற்றும் கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற கடனை ரத்து செய்ய வேண்டும். வேளாண் மசோதாவை திரும்பப்பெற வேண்டும்’உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. விளாத்திகுளம் வட்டாட்சியர் அலுவலகம் முன் நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு, சங்க தாலுகா செயலாளர் ராமலிங்கம் தலைமை வகித்தார். மாவட்டக்குழு உறுப்பினர்கள் அர்ச்சுணப் பெருமாள், வெங்கட்ராமன், மார்க்சிஸ்ட்தாலுகா செயலாளர் புவிராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

எட்டயபுரம் வட்டாட்சியர் அலுவலகம் முன் நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு விவசாய சங்க மாவட்ட குழுஉறுப்பினர் நடராஜன் தலைமை வகித்தார். விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட தலைவர் கு.ரவீந்திரன், கட்டுமான சங்க தாலுகா செயலாளர் செல்வக்குமார், மார்க்சிஸ்ட் கிளைச் செயலாளர் முருகேசன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

ஓட்டப்பிடாரம் வட்டாட்சியர் அலுவலக முன், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில பொருளாளர் கே.பி.பெருமாள் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. விவசாய தொழிலாளர் சங்க மாவட்டச் செயலாளர் சண்முகராஜ், மார்க்சிஸ்ட் ஒன்றிய செயலாளர் ராகவன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x