Published : 20 Jan 2021 03:14 AM
Last Updated : 20 Jan 2021 03:14 AM
நாகை அவுரித்திடலில், நேற்று முன்தினம் எம்ஜிஆரின் 104-வது பிறந்த நாள் விழா பொதுக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு தலைமை வகித்து, அதிமுக மாவட்டச் செயலாளரும், தமிழக கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சருமான ஓ.எஸ்.மணியன் பேசியது:
சாதாரணமான விஷயத்தை கூட சரித்திரமாக மாற்றிக் காட்டிய வர் எம்ஜிஆர். எம்ஜிஆர் வழியில் முதல்வர் பழனிசாமி ஆட்சி செய்து வருகிறார்.
தொழில்துறை தொடங்கி அனைத்து துறைகளிலும் தமி ழகம் இந்தியாவிலேயே சிறந்த மாநிலமாக உள்ளது. குறிப்பாக கடந்த 5 ஆண்டுகளில் விவசாய விளைபொருட்களை அதிகளவில் உற்பத்தி செய்த மாநிலமாக தமிழகம் முதலிடத்தில் இருந்து வருகிறது.
அதிமுகவை நிராகரிப்போம் என ஸ்டாலின் கூறி வரு கிறார். குடும்ப ஆட்சியை ஒழிப் போம். ஜெயலலிதா ஆட்சியை நிலைநாட்டுவோம் என்பதுதான் அதிமுகவின் கோஷம். வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக 234 தொகுதிகளிலும் வெற்றி பெற்று, மீண்டும் பழனிசாமி முதல்வராக அரியணையில் அமருவார் என்றார்.
கூட்டத்தில், அதிமுக அமைப்பு செயலாளரும், முன்னாள் எம்எல்ஏ வுமான ஆசைமணி, மாவட்டத் அவைத் தலைவரும், முன்னாள் அமைச்சருமான ஜீவானந்தம், மாநில மீனவரணி செயலாளரும், முன்னாள் அமைச்சருமான ஜெயபால், மாவட்ட கூட்டுறவு ஒன்றிய தலைவர் தங்க.கதிரவன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT