Published : 19 Jan 2021 06:51 AM
Last Updated : 19 Jan 2021 06:51 AM

அய்ய நாடார் கல்லூரியில் விழிப்புணர்வு ஓட்டப் போட்டி

போட்டிகளை முதல்வர் செ.அசோக் தொடங்கி வைத்தார்.மாணவர்களுக்கான போட்டியில் உடற்கல்வியியல் துறை மாணவர் ஹரன் முதலிடமும், வணிக நிர்வாகவியல் துறை மாணவர் கார்த்திக்பாண்டி இரண் டாமிடமும், கணினி அறிவியல் துறை மாணவர் விக்னேஷ் மூன்றாமிடமும் பிடித்தனர். மாணவிகளுக்கான போட்டியில் பொருளியல் துறை மாணவி மகேஸ்வரி முதலிடத்தையும், மின்னணு வணிகவியல் துறை மாணவி முத்துச்செல்வி இரண்டாமிடத்தையும், கருப்பாயி மூன்றாமிடத்தையும் வென்றனர்.

பேராசிரியர்களுக்கான ஓட்டப் போட்டியில் கணினி அறிவியல் துறை ராமர் முதலிடத்தையும், வணிகவியல் துறை கணேசமூர்த்தி இரண்டாமிடத்தையும், பாஸ்கரன் மூன்றாமிடத்தையும் வென்றனர். பேராசிரியைகளுக்கான போட்டியில் உடற்கல்வித் துறை கவிதா, வணிகவியல் துறை முருகலட்சுமி, காட் சித் தொடர்பியல் துறை அம்சவேணி ஆகியோர் முறையே முதல், இரண்டாம் மூன்றாமிடத்தை வென்றனர். ஆண் பணியாளர்களுக்கான ஓட்டப் போட்டியில் மணிமாறன், கார்த்திக் ஆகியோர் முதலாவது, இரண்டாவது இடத்தைப் பிடித்தனர். பெண் பணியாளர்களுக்கான போட்டியில் கல்லூரி செவிலியர் உமா முதலிடம் பிடித்தார். போட்டிக்கான ஏற்பாடுகளை உடற்கல்வி இயக்குநர் பால்ஜீவசிங், உதவி இயக்குநர் கவிதா உடற்கல்வியியல் துறைத் தலைவர் ஜான்சன் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x