Published : 19 Jan 2021 06:51 AM
Last Updated : 19 Jan 2021 06:51 AM
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே சாலையில் கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் குழந்தை உயிரிழந்தது. தாயார் உட்பட 3 பேர் படு காயமடைந்தனர்.
நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலத்தைச் சேர்ந்தவர் ரமேஷ்(55). இவரது மகள் அஸ்மிதா(25). இவருக்கும், திண்டுக்கல்லைச் சேர்ந்த விஜயராஜ் என்பவருக்கும் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு சேசாந்த்(1) என்ற குழந்தை உள்ளது. சமீபத்தில் தனது தந்தை வீட்டுக்குச் சென்றிருந்த அஸ்மிதா நேற்று தனது தம்பி அமர்த்தியாய்(20), மகன் சேசாந்த்(1) ஆகியோருடன் திண்டுக்கல் திரும்பிக் கொண்டிருந்தார். காரை சேந்தமங்கலத்தைச் சேர்ந்த தமிழரசன்(40) ஓட்டி வந்தார்.
கரூர்- திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் வேடசந்தூர் அருகே கருக்காம்பட்டி என்ற இடத்தில் கார் சென்றபோது வளைவில் நிலை தடுமாறி எதிர் திசையில் சென்று கவிழ்ந்தது. இதில் சேசாந்த் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது. மற்ற மூவரும் படுகாயமடைந்தனர். இந்த விபத்து குறித்து வேடசந்தூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வரு கின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT