Published : 19 Jan 2021 06:51 AM
Last Updated : 19 Jan 2021 06:51 AM

காரைக்காலில் மருத்துவர் வீட்டில் நகை திருட்டு

காரைக்கால்

காரைக்கால் நேரு நகர் விரிவாக்கம் முல்லை நகரில் வசித்து வருபவர் செல்வம். இவர் தமிழகப் பகுதியில் மருத்துவராக பணியாற்றி வருகிறார். கடந்த 13-ம் தேதி குடும்பத்தினருடன் ஊருக்குச் சென்ற செல்வம், நேற்று முன்தினம் இரவு வீடு திரும்பியபோது, வீட்டின் வெளிப்புற கதவு திறந்துகிடந்தது.

வீட்டுக்குள் சென்று பார்த்த போது, ரூ.6 லட்சம் மதிப்பிலான நகைகள் திருடு போனது தெரியவந்தது. இதுகுறித்து காரைக்கால் நகர போலீஸார் விசாரித்து வருகின்றனர். திருட்டு நிகழ்ந்த வீட்டை முதுநிலை காவல் கண்காணிப்பாளர் நிஹாரிகா பட் நேற்று பார்வை யிட்டார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x