Published : 19 Jan 2021 06:51 AM
Last Updated : 19 Jan 2021 06:51 AM

கனிமொழி எம்.பி. பிரச்சாரம்

நாகர்கோவில் நாகராஜா திடலில் நடந்த திமுக பொதுக்கூட்டத்தில் கனிமொழி எம்.பி. நேற்று பங்கேற்று பேசினார். இன்று (19-ம்தேதி) கன்னியாகுமரி கிழக்குமாவட்டத்தில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார். காலை 8 மணிக்கு தேவாளைமலர் சந்தையில் வியாபாரிகளைச் சந்தித்து பேசுகிறார்.

அதைத் தொடர்ந்து கன்னியாகுமரி சென்று திருவள்ளுவர் சிலைக்கு மரியாதை செலுத்துகிறார். காலை 10.15 மணியளவில்வடசேரி காய்கறி சந்தையில்வியாபாரிகளை சந்தித்து பேசுகிறார். பின்னர் வடசேரி பேருந்து நிலையம், மீன்சந்தைக்கு சென்றுமக்களுடன் கலந்துரையாடுகிறார்.

11.30 மணிக்கு மணவாளகுறிச்சியில் மக்கள் கிராமசபை கூட்டத்தில் பங்கேற்கும் அவர், சுனாமியால் இறந்தவர்கள் நினைவிடம்சென்று மரியாதை செலுத்துகிறார். 12.30 மணியளவில் குளச்சல் மீன்பிடி துறைமுகத்தை பார்வையிட்டு மீனவர்களிடம் குறைகளை கேட்டறிகிறார். மதியம் 1 மணிக்கு தெக்குறிச்சியில் கயிறு ஆலை தொழிலாளர்களை சந்தித்து பேசுகிறார். பின்னர் திமுக அலுவலகத்தில் ஆட்டோ ஓட்டுநர்களையும், கபடி வீீரர்களையும் சந்திக்கிறார். மாலை 5 மணிக்கு தர்மபுரத்தில் மக்கள்கிராமசபை கூட்டத்தில் பங்கேற்கிறார். நாளை (20-ம் தேதி) கன்னியாகுமரி மேற்கு மாவட்டத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் கனிமொழி பங்கேற்கவுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x