Published : 19 Jan 2021 06:51 AM
Last Updated : 19 Jan 2021 06:51 AM

முக்கடல் அணை நீர்மட்டம் உயர்வு

நாகர்கோவில்

கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாக கனமழை பெய்ததால் அணைகள், குளங்கள் வேகமாக நிரம்பின. தற்போது மழை ஓய்ந்த நிலையில், அணைகளுக்கு நீர்வரத்து குறைந்துள்ளது.

பேச்சிப்பாறை அணையின் நீர்மட்டம் 46.20 அடியாக உள்ளது. அணைக்கு விநாடிக்கு 806 கனஅடி தண்ணீர் வரும் நிலையில், 732 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. பெருஞ்சாணி அணையின் நீர்மட்டம் 72 அடியாக உள்ள நிலையில், 338 கனஅடி தண்ணீர் வருகிறது. 153 கனஅடி தண்ணீர் வெளியேறிவருகிறது. விவசாயிகள் பயன்பெறும் வகையில் பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைகளில் இருந்து பாசன கால்வாய்களில் சுழற்சி முறையில் தண்ணீர்திறக்கப்படுகிறது. முக்கடல் அணையின் நீர்மட்டம் 18 அடியாக உயர்ந்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x