Published : 14 Jan 2021 03:20 AM
Last Updated : 14 Jan 2021 03:20 AM

வேளாண் சட்ட நகல் எரிப்புதிருப்பூர்: மத்திய அரசு கொண்டு வந்த வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி நேற்று நடந்த போகி பண்டிகையின்போது வேளாண் சட்ட நகல் எரிப்புப் போராட்டம் அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக்குழு சார்பில் திருப்பூர் மாநகர் மற்றும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நடந்தது

வேளாண் சட்ட நகல் எரிப்பு

திருப்பூர்: மத்திய அரசு கொண்டு வந்த வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி நேற்று நடந்த போகி பண்டிகையின்போது வேளாண் சட்ட நகல் எரிப்புப் போராட்டம் அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக்குழு சார்பில் திருப்பூர் மாநகர் மற்றும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நடந்தது. திருப்பூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள விவசாயிகள், அவர்களது இல்லங்கள் மற்றும் தெருக்கள், கிராமங்களில் என ஏராளமான இடங்களில் வேளாண் சட்ட நகலை எரித்தனர். இந்த போராட்டங்களில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் ஆர்.குமார், ஊத்துக்குளி வட்டத் தலைவர் எஸ்.கோபாலகிருஷ்ணன் உட்பட பலர் பங்கேற்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x