Published : 14 Jan 2021 03:21 AM
Last Updated : 14 Jan 2021 03:21 AM

கொடைக்கானல் மலைச்சாலையில் போக்குவரத்து பாதிப்பு

கொடைக்கானல் மலைப் பகுதிகளில் தொடர் மழையால் மலைச் சாலையில் மரம் சாய்ந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

திண்டுக்கல் மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாகத் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் கொடைக்கானல் மலைப் பகுதியில் உள்ள வெள்ளி நீர்வீழ்ச்சி உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் கொட்டுகிறது. தொடர்மழையால் கொடைக் கானல் - வத்தலகுண்டு மலைச் சாலையின் குறுக்கே மயிலாடும்பாறை என்ற இடத்தில் மரம் சாய்ந்தது. இதனால் மலைச் சாலையில் சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மரத்தை அகற்றும் பணியில் நெடுஞ்சாலைத்துறையினர் ஈடுபட்டு போக்குவரத்தை சீர்செய்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x